லெமாங் விற்பனை கண்காணிப்பு தீவிரம்: உரிமமில்லாத வியாபாரிகளுக்கு MPAJ அபராதம்

30 மே 2026, 4:17 AM
லெமாங் விற்பனை கண்காணிப்பு தீவிரம்: உரிமமில்லாத வியாபாரிகளுக்கு MPAJ அபராதம்

ஷா ஆலாம், மே 30: சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, சில பகுதிகளில் உரிமமின்றி லெமாங் (Lemang) விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) அபராதம் விதித்துள்ளது.

லெமாங் விற்பனை நடவடிக்கைகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதையும், வியாபாரிகள் உரிம நிபந்தனைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்வதற்காக, உரிமம் மற்றும் தொழில்
முனைவோர் மேம்பாட்டுத் துறையால் இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக MPAJ தெரிவித்தது.

"சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட இந்த அபராத நடவடிக்கையானது, அமலில் உள்ள துணைச் சட்டங்களை அவர்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான ஒரு விழிப்புணர்வு மற்றும் அமலாக்க நடவடிக்கையாகும்," எனத் தனது முகநூல் (Facebook) பதிவில் MPAJ குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் சமூகத்தின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பேணிக் காக்கும் வகையில், வியாபாரிகள் தங்களது வணிக நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என MPAJ தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

"வியாபாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, விவேகமான முறையிலான தொடர் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும்," என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.