ECONOMY

சிலாங்கூர் எம்பிக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை

20 ஏப்ரல் 2024, 12:33 PM
சிலாங்கூர் எம்பிக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை

சிலாங்கூர் எம்பிக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 20 -  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது தொடர்பாக, செகு பார்ட் என்று அழைக்கப்படும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியாவின் (பெர்சாத்து) பத்ருல் ஹிஷாம் ஷஹாரின்,  சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்.

இன்று ஒரு அறிக்கையில், மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுதீன் ஷாபி முஹம்மது, வரவிருக்கும் கோலா குபு பாரு இடைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே  சுமத்தப் பட்டதாகக் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் நடந்ததைப் போன்றதுதான் இது என்றும், பொய்யான அறிக்கைகளை அளித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர் அமிருடினிடமிருந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டார்.

“கோலா குபு பாரு  இடைத்தேர்தலுக்கு முன்னதாக  அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த சில கட்சிகள் முயற்சிப்பதை  தவிர வேறொன்றுமில்லை, அதன் கதைக்களம் மற்றும் ஸ்கிரிப்ட் அடிப்படையில் பார்த்தால் அவர்களின்  நோக்கத்தை அடையாளப் படுத்துவது  எளிதானது.

"அந்த நபரின் அறிக்கை  அடிப்படையற்ற ஒரு வெற்று காகிதம். வட மாநிலத்தின் ஒரு  முக்கிய நபரைப் போன்ற சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் மற்றவர்களுடன் சேர அவரை அழைக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்ட நபரின் பெயரை குறிப்பிடாமல் சைபுதீன் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி புசார் ஒரு சந்தேகத்திற்குரிய நில பேரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து செகு பார்ட் அளித்த போலீஸ் புகாரை தான் படித்ததாக சைபுதீன் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் டெங்கிலில் உள்ள 100.04 ஏக்கர் நிலத்தை லாண்டசான் லுமாயன் பெர்ஜெயா Sdn Bhd (LLBS) க்கு மாற்றியதாக அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக பெர்சாத்து தகவல் குழு உறுப்பினர் கூறினார்.

"போலீசாரின் விசாரனைக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகம் முழுமையாக ஒத்துழைக்கும். மற்றும் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்து மந்திரி புசாரின் பெயரை அகற்ற அதிகாரிகளுக்கு உதவ தயாராக உள்ளது" என்று சைஃபுதீன் கூறினார்.

ஏப்ரல் 16 அன்று, அமிருதீன் குவாலா குபு பாரு வாக்காளர்களுக்கு, மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு முன்னதாக எதிர்க் கட்சிகளால் கொண்டு வரப்படும் தவறான அறிக்கைகள் மற்றும் எதிர்மறையான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மந்திரி புசார் தனது கடமையை செய்யவும், தவறு இருப்பின் விளைவுகளை சந்திக்க  தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் அவதூறுகளை, பொய்யான குற்றச்சாட்டுகளை   சகித்துக்கொள்ள மாட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கெடா  மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி எம்டிக்கு எதிராகவும், சுங்கை கிள்ளான் துப்புரவுத் திட்டம் தொடர்பான அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அமிருடின் வழக்குத் தொடர்ந்தார்.

பெர்ஜெயா குழும நிறுவனர் டான் ஸ்ரீ வின்சென்ட் டான் சுங்கை கிளாங்கில் 10 பில்லியன் ரிங்கிட் திட்டத்தை செயல்படுத்த விரும்புவதாகவும், அதற்கு ஈடாக தொழிலதிபர்  600 ஏக்கர் நிலத்தை இலவசமாகப் பெறுவார் என்றும் சனுசி முன்பு கூறினார்.

சிலாங்கூர் கடல் வழி நுழைவாயில் (SMG) திட்டம் தொடர்பாக 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு' கெடா மந்திரி புசார்  மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பெர் ஜெயா பிஎச்டி கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.