கூச்சிங், ஏப் 2- கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முழுமையாக பெற்றவர்கள் மாநில எல்லைகளை கடப்பதற்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப் படுவதற்கான சாத்தியத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கோடி காட்டியுள்ளார்.தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தை தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் நான் எழுப்பவிருக்கிறேன். இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் எந்த இடையூறும் இன்றி மாநில எல்லைகளை கடப்பதற்கு அனுமதிக்கும் சாத்தியத்தை ஆராயவுள்ளோம் என்றார் அவர்.
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதை அனுமதிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். தடுப்பூசி பெற்ற மலேசியர்களுக்கு பயண அனுமதி வழங்குவது தொடர்பில் பல நாடுகளுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை வரை நாட்டில் 215,395 பேர் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர்.
ECONOMY
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் எல்லை கடக்க அனுமதி- அரசு பரிசீலனை
2 ஏப்ரல் 2021, 2:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு
Shalini Rajamogun, Norrasyidah Arshad
18 மே 2026

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மே 2026

உங்கள் கருத்து என்ன?




