மண் சரிவில் சிக்கி இருவர் பலி

21 மே 2026, 5:42 AM
மண் சரிவில் சிக்கி இருவர் பலி

கோத்தா பாரு, மே 21: நேற்று ஜெலி, லடாங் சாவிட் ஜெரிம்போங் அருகே உள்ள சிற்றோடைப் பகுதியில் ஆற்றங்கரை மண் சரிந்து விழுந்ததில் இரு ஆடவர்கள் புதையுண்டு உயிரிழந்தனர்.

நேற்றிரவு 8.20 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை தளபதி இசுவான் சே இப்ராஹிம் தெரிவித்தார்.

32 மற்றும் 38 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் இரண்டு மீட்டர் ஆழமுள்ள மண்ணில் புதையுண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப் பட்டதாக அவர் கூறினார்.

"முதல் பலியானவரின் சடலம் நேற்றிரவு 9.25 மணிக்கும், இரண்டாவது பலியானவரின் சடலம் இரவு 11.18 மணிக்கும் மீட்கப்பட்டது," என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் மேல் நடவடிக்கைக்காக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.