ஷா ஆலம், ஏப்ரல் 20: 'லாங்குவேஜ் டிஸ்கவரி @ சிலாங்கூர் பொது நூலகம்' திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டுக்கான அடிப்படை மொழி வகுப்புகளின் 5-ஆம் பருவத்திற்கான பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) ஏற்பாடு செய்துள்ள இந்தத் திட்டம் தமிழ், அரபு, ஸ்பானிஷ் மற்றும் மாண்டரின் ஆகிய நான்கு மொழித் தேர்வுகளை வழங்குகிறது.
மாநில அரசின் மானிய உதவியுடன் சிலாங்கூர் குடிமக்களுக்காகப் பிரத்தியேகமாக இந்த வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மக்களிடையே மொழி கற்றலை ஊக்குவிக்கும் முயற்சியாக இது அமைகிறது.
ஏற்கனவே 'லாங்குவேஜ் டிஸ்கவரி' கணக்கைப் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆர்வமுள்ளவர்கள் www.ppas.gov.my/language_discovery என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் அல்லது மேலும் தகவலுக்கு 016-206 4264 மற்றும் 011-5879 1664 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
முன்னதாக, மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பன்மொழித் திறனை வலுப்படுத்தவும், மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் இந்த ஆண்டு முதல் இணையம் வழி இலவச வெளிநாட்டு மொழி வகுப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
மொழி என்பது உலக அரங்கில் மலேசியா போட்டியிட உதவும் ஒரு பலமே தவிர, பிளவுக்கான காரணம் அல்ல என்ற மாநில அரசின் நம்பிக்கையை இந்த அணுகுமுறை நிரூபிக்கிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த ரிம500,000 சிறப்பு ஊக்கத்தொகையைக் கடந்த வாரம் அவர் அறிவித்தார்.
சிலாங்கூர் இலவச மொழி வகுப்புகள்: பருவம் 5-க்கான பதிவு தொடக்கம்
20 ஏப்ரல் 2026, 1:21 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிலாங்கூர் இளைஞர்கள்: புதிய தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகும் மாநில அரசு
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் 1,227 ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன
Shalini Rajamogun, Sofia Nasir
24 ஏப்ரல் 2026

selangor
சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய முதலாளிகள் மீது குடிநுழைவுத்துறை சோதனை: 45 பேர் கைது
Pakiya
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் 285 கோயில்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




