சிலாங்கூரில் 1,227 ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

24 ஏப்ரல் 2026, 8:21 AM
சிலாங்கூரில் 1,227 ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஏப்ரல் 24: இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை சிலாங்கூரில் மொத்தம் 1,227 ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நுகர்வோர் மற்றும் கூட்டுறவு விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில், மக்களுக்கு அதிகப் பலன்களை வழங்குவதற்காக இந்தத் திட்டங்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கப்படும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கூட்டுறவு தொழில்முனைவோரின் தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோரிடம் சந்தைப்படுத்த 'ஜுவாலான் ரும்புன் சிலாங்கூர்' தொடர் விற்பனைகளையும் கோப்பராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் (KOHIJRAH), ஏற்பாடு செய்து வருகிறது.

"சிலாங்கூரில் கூட்டுறவு இயக்கம் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் கூட்டுறவு வணிக மாதிரி அதன் உறுப்பினர்களின் பங்களிப்பில் இயங்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் லாபம் அடிமட்ட அளவில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்," என்றார்.

"கூட்டுறவு விவசாயம் மற்றும் மீன்வளப் பொருட்களுக்கான விநியோகச் சங்கிலி முறையை மேம்படுத்தும் முயற்சியில், சபாக் பெர்ணமில் மாநில கூட்டுறவு விவசாய விளைபொருள் சேகரிப்பு மையத்தை அமைக்க மாநில அரசு 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. இந்த மையத்தை கோஹிஜ்ரா உருவாக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

செமினி சட்டமன்ற உறுப்பினர் நுஷி மஹ்ஃபோட்ஸ், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகக்கூடிய அளவில் இருப்பதை உறுதி செய்வதற்கான சந்தை தலையீடுகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போது டத்தோ ரிசாம் இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) சிலாங்கூர், வர்த்தகர்களின் இணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக 'பாசார் பாத்து' திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

"தற்போது, சிலாங்கூரில் டெங்கில் பொதுச் சந்தை மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் ஓத்மான் சந்தை ஆகிய இரண்டு சந்தைகள் 'பாசார் பாதோ' என வகைப்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.

மேலும், ஏழு ஓய்வு மற்றும் சேவைப் பகுதிகள் (R&R) மற்றும் சுற்றுலாத் தலங்களும் 'பாதோ' திட்டம் மற்றும் 'பாதோ' சுற்றுலா மைய மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

"மானியம் பெற்ற டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை 'ஃப்ளீட் கார்டு' மூலம் முறையாகக் கட்டுப்படுத்துவதை உறுதிசெய்ய, மானிய டீசல் மற்றும் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்புகளையும் கேபிடிஎன் அறிமுகப்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு இறுதியில், வணிகச் சட்டங்களுடன் இணங்கும் கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு முன்முயற்சியாக கேபிடிஎன், 'பாதோ' (PATUH - Program Asas Tahap Utamakan Hak) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.