ஷா ஆலம், ஏப்ரல் 3 - காசாவிற்கான மலேசியாவின் அவசரக்கால உதவிப் பணி மற்றும் குளோபல் சுமுட் புளோட்டிலா 2.0 குழுவிற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைப் பிரதிநிதித்து சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்குவார். இந்த மனிதாபிமானக் குழு எதிர்வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் குழுவின் (மாப்பிம்) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பணியில், காசாவில் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் 374 டன் எடையுள்ள உதவிப் பொருட்கள் 30 கொள்கலன்களில் கொண்டு செல்லப்படும் என்று மந்திரி புசார் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"மந்திரி புசார் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவதோடு, கெய்ரோவில் கொள்கலன்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்வார்."
"மேலும், காசா முற்றுகை தொடர்பான மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த ரஃபா எல்லைக் கடப்பில் நடைபெறும் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்குவார். அதைத் தொடர்ந்து ஸ்பெயினின் பார்சிலோனா துறைமுகத்திலிருந்து சுமுட் நுசாந்தரா குழு புறப்படுவதையும் அவர் கண்காணிப்பார்," என்று அந்த அதிகாரப்பூர்வ அறிக்கை குறிப்பிட்டது.
அமிருடின் தலைமையிலான இந்தக் குழுவின் பாதுகாப்பு மற்றும் பயணம் சுமுகமாக நடைபெற சிலாங்கூர் மற்றும் மலேசிய மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.
"இஸ்ரேலிய சியோனிச ஆட்சியால் தொடர்ந்து முற்றுகையிடப்பட்டு ஒடுக்கப்படும் பாலஸ்தீன மக்களின் நீதிக்காக சிலாங்கூரும் மலேசியாவும் தொடர்ந்து குரல் கொடுக்கும்," என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
உலகெங்கிலும் உள்ள 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் குளோபல் சுமுட் புளோட்டிலா 2.0 மனிதாபிமானப் பணியில் மடாணி அரசாங்கம் நேரடியாகப் பங்கேற்கும் என்று பிரதமர் இதற்கு முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இனம், மதம் அல்லது எல்லைகளைப் பாராமல், நீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டத் தேவைப்படும் ஒரு பன்னாட்டு தார்மீகப் போராட்டத்தின் தொடர்ச்சியே இந்தப் பங்களிப்பு என்று அன்வார் கூறியிருந்தார்.
காசா நிவாரணப் பயணம்: பிரதமர் அன்வாரின் பிரதிநிதியாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை ஏற்கிறார்
3 ஏப்ரல் 2026, 9:38 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சண்டாக்கான் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆவண மாற்று, ரிம300 கல்வி உதவி
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

national
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மக்களின் நலனே முக்கியம் - பிரதமர் அன்வார்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
சண்டாக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
தனியார் துறையில் 'நெகிழ்வான பணிமுறை': பிரதமர் வலியுறுத்து
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




