ECONOMY

அம்பாங்கில் உள்ள நான்கு மசூதிகள், 23 சூராவ்களுக்கும் RM40,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

20 ஏப்ரல் 2022, 5:42 AM
அம்பாங்கில் உள்ள நான்கு மசூதிகள், 23 சூராவ்களுக்கும் RM40,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாங், ஏப். 20: மாவட்டத்தில் உள்ள நான்கு மசூதிகளுக்கு விநியோகிக்க மாநில அரசு RM20,000 ஒதுக்கீடும், 23 சூராவ்களுக்கு வழங்க மற்றொரு RM20,000 நன்கொடையாக வழங்கவுள்ளது.

பண்டார் பாரு அம்பாங் மசூதி; அந்தாரபங்சா மலை மசூதி; யூ.கே பெர்டானா மசூதி மற்றும் கம்போங் மெலாயு அம்பாங்கிலுள்ள ஜாமியில்ஹுதா மசூதிக்கு டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த நன்கொடையை வழங்கினார்.

மேலும் 20 குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் (பி40) மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் ஹரி ராயா பெருநாள் பங்களிப்பாக அடிப்படைத் தேவை பொருட்கள் மற்றும் RM100 ரொக்கத்தைப் பெற்றனர்.

இந்த ஒதுக்கீடு சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மற்றும் புக்கிட் அந்தாரபங்சா மாநிலச் சட்டசபை (DUN) சமூகச் சேவை மையத்தின் பங்களிப்பு என்று அமிருடின் கூறினார்.

முன்னதாக, பண்டார் பாரு அம்பாங் மசூதியில் இஸ்சாக் மற்றும் தாராவிஹ் தொழுகைகளை நிறைவேற்றினார். வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் சுசானா ஷஹாருடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதற்கு முன்னதாக, செரெண்டாவில் உள்ள நூருல் ஈமான் மசூதியில் உலு சிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300 துறைத் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசார் கலந்து கொண்டார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.