ECONOMY

நிலச்சரிவு: வீடுகள் மோசமாகச் சேதமடைந்தன, நான்கு குடும்பங்களுக்கு உதவச் சிலாங்கூர் சக்காட் வாரியம் RM20,000 விநியோகித்தது

18 ஏப்ரல் 2022, 2:11 PM
நிலச்சரிவு: வீடுகள் மோசமாகச் சேதமடைந்தன, நான்கு குடும்பங்களுக்கு உதவச் சிலாங்கூர் சக்காட் வாரியம் RM20,000 விநியோகித்தது

ஷா ஆலம், ஏப்ரல் 18: சிலாங்கூர் சக்காட் வாரியம் (LZS) மார்ச் மாதம் அம்பாங்கில் உள்ள தாமான் புக்கிட் பெர்மாய் 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு RM20,000 நன்கொடையாக வழங்கியது.

பாதிக்கப்பட்டவரின் குடியிருப்பு மிகவும் சேதமடைந்துள்ளதாகவும், அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்கத் தற்காலிகமாக வீட்டைக் காலி செய்யும்படி அறிவுறுத்தப் பட்டதாகவும் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

“நிலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று வரை பாதிக்கப்பட்ட சிலர் திரும்பி வரவில்லை. சியாவலுக்கு முன்னதாக அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM5,000 உதவி அவர்களுக்கு ஏற்பட்ட பேரழிவின் தாக்கங்களை எதிர்கொள்வதில் அவர்களின் சுமை குறையும்" என்று அவர் பேஸ்புக் மூலம் கூறினார்.

நன்கொடை டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் கடந்த சனிக்கிழமை அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) செராஸ் பாரு மண்டபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மார்ச் 11 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார், அத்துடன் 15 வீடுகள் மற்றும் 10 வாகனங்கள் பாதிக்கப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.