பண்டார் பாரு பாங்கி, அக் 8- இங்குள்ள பிரிமா 8, சமூக வேளாண் தோட்டத்திற்கு விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் நேற்று வருகைளித்தார்.
அவரது இவ்வருகையின் போது உலு லங்காட் மாவட்ட அதிகாரி டாக்டர் அனி அகமது மற்றும் சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜொஹார் ஆகியோரும் உடனிருந்தனர்.
மாநிலத்தில் குறிப்பாக நோய்த் தொற்று காலத்தில் நவீன விவசாயத்தையும் உணவு உற்பத்தியையும் மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தொற்று காலத்தை மாநில அரசு படிப்பினையாகக் கொண்டுள்ளது. அதன் அடிப்டையில் உணவுக்கான உத்தரவாதத்திற்கு அது தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது என்று அவர் சொன்னார்.








