ECONOMY

சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று 1,231 ஆக உயர்வு:  நாட்டில் 11,332 சம்பவங்கள் பதிவு

28 செப்டெம்பர் 2021, 10:29 AM
சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று 1,231 ஆக உயர்வு:  நாட்டில் 11,332 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், செப் 28- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 1,231 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 979 ஆக மட்டுமே இருந்தது.

நாட்டில் இன்று 11,332  கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று இந்த எண்ணிக்கை 10,959 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 2,358 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 1,319 சம்பவங்களுடன் ஜோகூரும் 1,088 சம்பவங்களுடன் கிளந்தானும் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

சபா – 965

பினாங்கு– 895

கெடா – 819

பேராக் – 678

பகாங் – 677

திரங்கானு – 629

மலாக்கா– 303

கோலாலம்பூர் – 240

நெகிரி செம்பிலான் – 89

புத்ரா ஜெயா – 19

பெர்லிஸ் – 19

லபுவான் – 3

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.