ECONOMY

தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களும் எஸ்.ஒ.பி.யை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்

10 ஆகஸ்ட் 2021, 5:25 AM
தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களும் எஸ்.ஒ.பி.யை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்

ஷா ஆலம், ஆக 10-  இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களும் எஸ்.ஒ.பி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை  தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 தொற்று தொடர்பான விவகாரத்தில் தாங்கள் இன்னும் தடுப்பூசியை பெறாதவர்கள் எண்ணத்தில் அவர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

பொதுமக்கள் எந்த சூழ்நிலையிலும் அலட்சியமாக இருக்க கூடாது. அவர்கள் தொடர்ந்து கூடல் இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினியை பயன்படுத்துவது, அதிக நெரிசல்மிக்க இடங்களை தவிர்ப்பது  போன்ற விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் விரைந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அவர், தடுப்பூசியை பெற்ற பிறகும் அவர்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி விதிமுறைகளை கடைப்பிடித்து வரவேண்டும் என்றார் அவர்.

கோவிட்-19 தடுப்பூசி நோய்த் தொற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளித்தாலும் நாமும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.