SELANGOR

ஏழு அணைகளில் நீரின் அளவு 97% மேல் உள்ளது

13 மே 2017, 3:21 AM
ஏழு அணைகளில் நீரின் அளவு 97% மேல் உள்ளது

ஷா ஆலம், மே 13:

சிலாங்கூரில் உள்ள அனைத்து அணைகளிலும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு பயனீட்டாளர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாகவும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்  (லுவாஸ்) தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு சிலாங்கூரில் ஏழு அணைகளிலும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக  அல்லது 97%-க்கு மேல் உள்ளதாக லுவாஸ் அறிவித்துள்ளது.

சிலாங்கூர் ஆற்றின் அணை 100% அல்லது 230 கன மீட்டரிலும் செமினி அணையில் 100.32% அல்லது 59.26 கன மீட்டர், லாங்காட்  (34.10 கன மீட்டர்) சுபாங்  ஏரியின் நீர் மட்டம்  42.1 கன மீட்டராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சுங்கை லாபூ நீர் தேக்கி குளத்தில் 99.62% அளவை எட்டியது எனவும் சுங்கை திங்கி அணையில் 97.03% அல்லது 111.10 கன மீட்டர் நீர் மட்டம் இருப்பதாக லுவாஸ் தெரிவித்துள்ளது.

கிள்ளான் கேட்ஸ் அணையின் நீர் மட்டம் 97.30% அடைந்த நிலையில் பத்து  அணை 74.92% அல்லது 23.95 கன மீட்டர் அளவில்  உள்ளதாகபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.