போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கிய அரசு ஓய்வூதியர் ஒரு லட்சம் ரிங்கிட்டை இழந்தார்

3 ஜூன் 2026, 1:39 AM
போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கிய அரசு ஓய்வூதியர் ஒரு லட்சம் ரிங்கிட்டை இழந்தார்

ஷா ஆலம், ஜூன் 3: போலி முதலீட்டுத் திட்டத்தை நம்பி முதலீடு செய்த அரசு ஓய்வூதியர் ஒருவர், தமது வாழ்நாள் சேமிப்பான சுமார் ஒரு லட்சம் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த 59 வயது நபர், கடந்த மே 14-ஆம் தேதி டிக்டாக் (TikTok) செயலியில் வந்த முதலீட்டு விளம்பரம் ஒன்றைப் பார்த்து ஈர்க்கப்பட்டதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல்துறை தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், அந்த விளம்பரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் டெலிகிராம் (Telegram) செயலி வழியாக மோசடி கும்பலைத் தொடர்பு கொண்டுள்ளார் என்றும், அவர்கள் ஆசை காட்டிய முதலீட்டுத் திட்டத்தில் இணைவதற்காகப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார் என்றும் அஸ்லி முகமட் கூறினார்.

அந்தப் போலி முதலீட்டுத் திட்டத்தில் இணைந்த சில நாட்களிலேயே, அவருக்குப் பெருமளவு லாபம் கிடைத்துவிட்டதாக மோசடி கும்பல் நம்ப வைத்துள்ளது. அந்த லாபப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால், மேலும் பல வெவ்வேறான வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அவர்களின் பேச்சை உண்மை என்று நம்பி, அடுத்தடுத்துப் பணத்தை அனுப்பிய பாதிக்கப்பட்டவர், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து நேற்று இரவு 8.24 மணியளவில் கோலா திரங்கானு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மோசடி கும்பலின் சதி வலையில் சிக்கியதால், அந்தப் முதியவர் தனது ஓய்வூதியச் சேமிப்புப் பணத்திலிருந்து மொத்தம் 97,933 ரிங்கிட்டை முழுமையாக இழந்துள்ளார் என்று அசிஸ்டென்ட் கமிஷனர் அஸ்லி முகமட் நூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.