இஸ்தான்புல் / பெய்ரூத், மே 9 — தெற்கு லெபனானில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரவலான இஸ்ரேலிய வான் தாக்குதல்களில், சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவர் உட்பட குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக Anadolu Agency, லெபனானின் அதிகாரப்பூர்வ தேசிய செய்தி முகமையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
டைர் மாவட்டத்தில் உள்ள Toura நகரை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு வான் தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியதாக நம்பப்படும் ஒரு சிறுமியை தேடும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது. மேலும், தெற்கு லெபனானின் Marjayoun, Hasbaya, Bint Jbeil, Nabatieh, Sidon மற்றும் Jezzine மாவட்டங்களி-லும் பல இஸ்ரேலிய வான் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதேவேளை Mansouri மற்றும் Buyout al-Sayyad புறநகர் பகுதிகள் மீது பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை அதிகாலை Bayada அருகிலுள்ள Buyout al-Sayyad பகுதியை நோக்கி இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் முன்னேறி-யதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், Toul பகுதியில் உள்ள Sheikh Ragheb Harb Hospital அருகிலிருந்த ஹத்ராஜ் கட்டிடத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் அழித்தன. இதில், சம்பவ இடத்துக்கு அருகில் பணியாற்றிய Islamic Risala Scout Association அமைப்பைச் சேர்ந்த நான்கு அவசர மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி பேச்சாளரான Avichay Adraee, Nmairiyeh, Tayr Felsay, Hallousiyyeh, மேல் Hallousiyyeh, Toura மற்றும் Maarakeh பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். ஏப்ரல் 17 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் மே 17 வரை நீட்டிக்கப் பட்டிருந்தபோதிலும், இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் தினசரி தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 2,759 பேர் உயிரிழந்துள்ளனர்; 8,512 பேர் காயமடைந்துள்ளனர்; மேலும் நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியான 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து உள்ளனர்.
தற்போதைய மோதலின் போது, பல தசாப்தங்களாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளையும், 2023–2024 போருக்குப் பின் கைப்பற்றிய பகுதிகள் உட்பட, தெற்கு லெபனானின் சில பகுதிகளை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது. தற்போதைய மோதலின் போது, தெற்கு எல்லைப் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் வரை முன்னேறி உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.




