புஞ்சாக் ஆலமில்  சிறுவன்  தவறி விழுந்து கால்வாய்க்கு வேலி மற்றும்  முடிகள் பொருத்தப்படும்- மந்திரி புசார்

2 மே 2026, 5:30 AM
புஞ்சாக் ஆலமில்  சிறுவன்  தவறி விழுந்து கால்வாய்க்கு வேலி மற்றும்  முடிகள் பொருத்தப்படும்- மந்திரி புசார்
புஞ்சாக் ஆலமில்  சிறுவன்  தவறி விழுந்து கால்வாய்க்கு வேலி மற்றும்  முடிகள் பொருத்தப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலாம், மே 2: புஞ்சாக் ஆலமில் உள்ள லோரோங் சக்கரா பூர்ணாமாவில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்து வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக மாநில அரசாங்கம் பாதுகாப்புக் வேலிகளையும் கால்வாய் மூடிகளையும் பொருத்தும்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இப்பகுதியில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்த உடனடி நடவடிக்கை முக்கியம் என்றார்.

"அப்பகுதியில் பொருத்தப்பட வேண்டிய பாதுகாப்பு கட்டமைப்பின் அளவு, நீளம் போன்ற அம்சங்களை நாங்கள் ஆராய்வோம்."

"உள்ளூராட்சி மன்றம் அல்லது சிலாங்கூர் மந்திரி புசார் வாரியம் (MBI) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம், இதை விரைவுபடுத்துமாறு நான் கேட்டுக் கொள்வேன்," என்று அவர் சினார் ஹரியான் அறிக்கையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதே வேளையில், பொதுமக்கள், குறிப்பாகப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறும், ஆபத்தான பகுதிகளில் விளையாடுவதைத் தடுக்குமாறும் அமிருடின் கேட்டுக்கொண்டார்.

"உயிர் இழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான இடங்களில் குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர்கள் தடுத்து, விழிப்புடன் இருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, பண்டார் புஞ்சாக் ஆலமில் உள்ள லோரோங் சக்கரா பூர்ணாமா 12/27-இல் உள்ள கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போன சிறுவன், மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

10 வயதான கைரில் இசானியின் சடலம், மதியம் 1 மணியளவில் ஈஜோக், சுங்கை பூலோவிற்கு அருகிலுள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், பாதிக்கப்பட்டவருக்கான தேடல் மற்றும் மீட்புப் பணி (SAR) மூன்றாவது நாளாகத் தொடர்ந்ததாக முன்னதாகக் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

பதவிக்காலக் கட்டுப்பாடு: சீர்திருத்தங்களை முன்னெடுப்பது கூட்டுப் பொறுப்பாகும் - அமிருடின் ஷாரி

Mavitthran
3 மார்ச் 2026
பதவிக்காலக் கட்டுப்பாடு: சீர்திருத்தங்களை முன்னெடுப்பது கூட்டுப் பொறுப்பாகும் - அமிருடின் ஷாரி

சிலாங்கூர் ரும்புன் நோன்புக் கஞ்சி விநியோகம்: மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

Mavitthran
27 பிப்ரவரி 2026
சிலாங்கூர் ரும்புன் நோன்புக் கஞ்சி விநியோகம்: மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும்

Pakiya
14 பிப்ரவரி 2026
நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது போன்ற சிக்கல்களைக் கையாள்வதற்கு சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) நிர்ணயித்துள்ள இந்த நடைமுறை சிறந்த வழியாகும்

சிலாங்கூர் மிகப்பெரிய சோலார் பண்ணையை உருவாக்குகிறது, 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பிவி பெஸ்தாரி திட்டம்

Pakiya
10 பிப்ரவரி 2026
சிலாங்கூர் மிகப்பெரிய சோலார் பண்ணையை உருவாக்குகிறது, 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பிவி பெஸ்தாரி திட்டம்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.