கோலாலம்பூர் மே 01 – MADANI 30 விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி, கெரெத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (KTMB) வழங்கும் மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் எக்ஸ்பிரஸ் ராக்யாட் தீமுரான் (ERT) சேவைகளுக்கான 30 விழுக்காடு தள்ளுபடி மே 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு (MOT) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது மிகவும் மலிவு மற்றும் எளிதான ரயில் போக்குவரத்திற்கு மாறுவதற்கான சமூகத்தின் தயார் நிலையை பிரதிபலிக்கிறது.
"மே முதல் அக்டோபர் 2026 வரையிலான பயணக் காலத்திற்கு, MADANI 30 முயற்சியின் கீழ் 1.2 மில்லியன் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இது மக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே மலிவான கட்டணத்தில் திட்டமிட ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
"எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் விருப்பமான இடங்களுக்குச் செல்ல KTMB சேவைகளைப் பயன்படுத்தி பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு போக்குவரத்து அமைச்சு கேட்டுக்கொள்கிறது."
இந்தச் சலுகை, அனைத்து ETS பிரிவுகளுக்கும், ஜேபி சென்ட்ரல் - தும்பாட் - ஜேபி சென்ட்ரல் இடையேயான ERT சேவைக்கும் பெரியவர்களுக்கான பயணச்சீட்டு வாங்குதல்களுக்குப் பொருந்தும். பயணக் காலம் இந்த ஆண்டு அக்டோபர் 14 வரை நீடிக்கும்.
பள்ளி விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலங்களைத் தவிர்த்து, திங்கள் முதல் வியாழன் வரையிலான பயணங்களுக்கு மட்டுமே இந்தத் தள்ளுபடி செல்லுபடியாகும்.
சாலைப் போக்குவரத்திலிருந்து மிகவும் நீடித்த, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்திற்கு மாறும் "Road to Rail" திட்டத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த சலுகை என்று போக்குவரத்து அமைச்சு விளக்கியது.
"ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துவது மிகவும் வசதியானது மற்றும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதோடு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவுகிறது."
"இந்த அணுகுமுறை, போக்குவரத்து நெரிசல், கரிமத் தடம் (carbon footprint) ஆகியவற்றைக் குறைத்தல் மற்றும் ஒரு சிறந்த ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய MADANI அரசாங்கத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
பொதுமக்கள் KTMB-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மேலதிகத் தகவல்களைப் பெறலாம். KTMB மொபைல் செயலி, KITS Style, அதிகாரப்பூர்வ KTMB இணையதளம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கியோஸ்க்குகள் மூலம் முன்கூட்டியே பயணச்சீட்டுகளை வாங்கலாம்.
மலேசியாவின் எதிர்காலப் போக்குவரத்தின் முதுகெலும்பாக நாட்டின் ரயில் போக்குவரத்துச் சூழலை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
(KTMB) வழங்கும் மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் எக்ஸ்பிரஸ் ராக்யாட் தீமுரான் (ERT) சேவைகளுக்கான 30 விழுக்காடு தள்ளுபடி மே 14 வரை
1 மே 2026, 1:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ETS மற்றும் ERT இரயில் பயணக் கட்டணத்தில் 30 சதவீதத் தள்ளுபடி; ஏப்ரல் 15 முதல் அமல்
Pakiya
14 ஏப்ரல் 2026

national
கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் சேவை அட்டவணையை கேடிஎம்பி மாற்றியமைக்கிறது
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

national
இரயில் தண்டவாளத்திற்கு அருகே கேபிள் திருட்டு - சந்தேக நபர் கைது
Shalini Rajamogun
27 மார்ச் 2026

national
மின்சார ரயில் சேவைகள் மீண்டும் செயல்படும் - கே.டி.எம்.பி (KTMB) அறிவிப்பு
Shalini Rajamogun
26 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




