வாஷிங்டன், ஏப்ரல் 30 - ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு விமானம் தாங்கி கப்பல், "வரவிருக்கும் நாட்களில்" மேற்கு ஆசியாவில் இருந்து புறப்பட்டு தனது சொந்த நாட்டிற்கு திரும்பத் தயாராகி வருவதாக, புதன்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. தி வாஷிங்டன் போஸ்ட்டை மேற்கோள்காட்டி அனடோலு ஏஜென்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
பல அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், தற்போது மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள மூன்று அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான ஃபோர்டு, மே மாதத்தின் நடுப்பகுதியில் வர்ஜீனியாவில் உள்ள அதன் சொந்த துறைமுகத்திற்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 309 நாட்கள் என்ற அதன் நீண்ட பணிப் பயணம், எந்த ஒரு நவீன அமெரிக்க விமானம் தாங்கி கப்பலுக்கும் மிக நீண்ட பணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ஆகிய கப்பல்கள் அரபிக் கடலில் தொடர்ந்து செயல்படும். ஈரானிய துறைமுகங்களில் இருந்து எண்ணெய் அல்லது பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்க கடற்படை அங்கு தடைகளைச் செயல்படுத்தி வருகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது கூட்டாகத் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கச் சொத்துக்களைக் கொண்ட மற்ற பிராந்திய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்க-இஸ்ரேல் நடவடிக்கையில் 3,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், ஏப்ரல் 8 அன்று வாஷிங்டனும் தெஹ்ரானும் இரண்டு வார காலப் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
முதலில் ஏப்ரல் 22 அன்று முடிவடைய இருந்தாலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் இராணுவத் தலைவர் ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 21 அன்று போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தார்.
-- பெர்னாமா
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் விரைவில் மேற்கு ஆசியாவை விட்டு வெளியேறும் - அறிக்கை
30 ஏப்ரல் 2026, 3:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


