பொது இடத்தில் பாலியல் அத்துமீறல்: ஆடவரை  போலிஸ் கைது செய்தது 

24 ஏப்ரல் 2026, 6:07 AM
பொது இடத்தில் பாலியல் அத்துமீறல்: ஆடவரை  போலிஸ் கைது செய்தது 

ஈப்போ, ஏப்ரல் 24 -- கிரிக்கில் உள்ள ஒரு பேரங்காடியில் நேற்று பொது இடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான புகார் நேற்று மாலை 5.57 மணியளவில் கிடைத்ததாக கிரிக் மாவட்ட போலீஸ் தலைவர், சூப்பிரின்டெண்டன்ட் அப்துல் சாமட் ஒத்மான் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பேரங்காடியில் வேலை செய்து கொண்டிருந்த 25 வயதுடைய புகார்தாரரான பெண், சந்தேக நபர் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதைக் கண்டு அவரைக் கண்டித்ததாகவும், அதன்பிறகு அந்த ஆடவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

"கிரிக் மாவட்டப் போலீஸ் தலைமையகம் 55 வயதான அந்த ஆடவரைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது. மேலதிக விசாரணைக்காக இன்று தடுப்புக் காவல் உத்தரவுக்கு விண்ணப்பிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 509-வது பிரிவின் கீழும், சிறு குற்றங்கள் சட்டம் 1955-இன் 14-வது பிரிவின் கீழும் விசாரிக்கப்படுவதாக அப்துல் சாமட் கூறினார்.

நேற்று இரவு 9.45 மணியளவில் கிரிக் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாதவர், திருமணமாகாதவர் என்றும், இதற்கு முன்பு மனநலப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்றவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.