கூச்சிங், ஏப்ரல் 14 – பல்வேறு குடிநுழைவு குற்றங்களைச் செய்த சந்தேகத்தின் பேரில், இன்று அதிகாலை இங்குள்ள இரண்டு கட்டுமானத் தளங்களில் குடி நுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 45 வெளிநாட்டினர் கைது செய்யப் பட்டனர்.
குடி நுழைவுத் துறையின் துணை தலைமை இயக்குநர் (நடவடிக்கை) டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி கூறுகையில், தபுவான் ஜெயாவை உள்ளடக்கிய அப்பகுதியில் உள்ள தொழிலாளர் தங்குமிடங்களை 55 அமலாக்க அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனையிட்டதாகத் தெரிவித்தார்.
"இந்த இரண்டு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகளின் விளைவாக, இங்குள்ள தொழிலாளர் தங்குமிடங்களில் வசித்த 92 வெளிநாட்டினரை நாங்கள் சோதனையிட்டோம்," என்றார் அவர்.
"அவர்களில், 21 முதல் 50 வயதுக்குட்பட்ட 39 ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட 45 பேர் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்தது கண்டறியப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் இந்த நடவடிக்கை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நாட்டிற்குள் நுழைவதற்கும் தங்குவதற்கும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்தது போன்ற குற்றங்கள் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகாலை 1 மணியளவில் நடந்த இந்தச் சோதனையின் போது, அமலாக்க அதிகாரிகளின் வருகையை உணர்ந்த சில வெளிநாட்டினர் தப்பியோட முயன்றதால் குடிநுழைவுத் துறை சவால்களை எதிர்கொண்டதாக லோக்மான் எஃபெண்டி கூறினார்.
"அவர்களில் சிலர் கட்டுமான தளப் பகுதியில் தப்பி ஓடி ஒளிய முயன்றனர், ஆனால் அவர்கள் அமலாக்க அதிகாரிகளால் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டனர்," என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது உள்ள சட்ட விதிகளின்படி மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக குடி நுழைவுத் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
இங்குள்ள இரண்டு கட்டுமானத் தளங்களில் குடி நுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 45 வெளிநாட்டினர் கைது செய்யப் பட்டனர்
14 ஏப்ரல் 2026, 7:46 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
11,984 எச்சரிக்கை நோட்டீஸ்கள் சாலைப் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது
Evelyn Moses
13 செப்டெம்பர் 2025

selangor
சுக்மா 2026 ஒத்திவைக்கப்பட்டால் அதற்குச் சரவாக் இணக்கம்: சிலாங்கூரின் முடிவுக்காக எதிர்பார்ப்பு
Pakiya
21 ஏப்ரல் 2026

antarabangsa
தரிசாக உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், தங்கள் நிலங்களை குத்தகைக்கு விடவேண்டும்
Pakiya
10 ஏப்ரல் 2026

national
மூன்றில் ஒரு பங்கு பொதுப் பணித்துறைத் திட்டங்கள் கால அட்டவணைக்கு முன்னதாகவே முன்னேற்றம் - அஹ்மத் மஸ்லான்
Pakiya
18 மார்ச் 2026
உங்கள் கருத்து என்ன?


