அரசாங்கம் செயல்படுத்திய பூடி95 இலக்கு மாணியத் திட்டம் 85 விழுக்காடு மக்களைப் பாதுகாத்தன- பிரதமர் அன்வார்

11 பிப்ரவரி 2026, 8:22 AM
அரசாங்கம் செயல்படுத்திய பூடி95 இலக்கு மாணியத் திட்டம் 85 விழுக்காடு மக்களைப் பாதுகாத்தன- பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப். 11: உலக வங்கி மற்றும் சில பொருளாதார நிபுணர்களின் பரிந்துரையான விலை மிதவைக் கொள்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது, ஏனெனில் அது பெரும்பான்மையான மக்களுக்குச் சுமையாக அமையும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மாறாக, அரசாங்கம் செயல்படுத்திய இலக்கு மானியத் திட்டம் 85 விழுக்காடு மக்களைப் பாதுகாத்ததோடு, பெட்ரோலுக்கு RM6 பில்லியனையும் டீசலுக்கு RM5 பில்லியனையும் சேமித்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

எரிபொருள் பயன்பாடு தொடர்ந்து மக்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதற்காக, BUDI95 விலையை ஒரு லிட்டருக்கு RM1.99 என அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

BUDI95 செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் சில சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் ஒப்புக்கொண்டார்.

“ரந்தாவ் பாஞ்சாங், தாவாவ் மற்றும் பெர்லிஸ் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான பயன்பாட்டு முறைகள் இன்னும் கண்டறியப்பட்டுள்ளன."

“இந்த மூன்று பகுதிகளில்தான் அதிக கசிவுகள் பதிவாகியுள்ளன. வருவாய் இழப்பைத் தடுப்பதற்காக, இப்போது அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்தால் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு  உதவும் திட்டத்தை அரசாங்கம் விரைவில்  அறிவிக்கும்

Pakiya
21 ஏப்ரல் 2026
உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்தால் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு  உதவும் திட்டத்தை அரசாங்கம் விரைவில்  அறிவிக்கும்

அரசாங்கம் செயல்படுத்திய பூடி95 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டம் 85 விழுக்காடு மக்களைப் பாதுகாத்துள்ளது - பிரதமர் அன்வார்

Mavitthran
11 பிப்ரவரி 2026
அரசாங்கம் செயல்படுத்திய பூடி95 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டம் 85 விழுக்காடு மக்களைப் பாதுகாத்துள்ளது - பிரதமர் அன்வார்

வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பு; அனைத்து மாநில அரசாங்கங்களும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - பிரதமர் அன்வார் இப்ராஹிம்

Mavitthran
10 பிப்ரவரி 2026
வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பு; அனைத்து மாநில அரசாங்கங்களும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - பிரதமர் அன்வார் இப்ராஹிம்

விதிமுறைகளை மீறி கட்டுப்படும் வழிப்பாட்டு தலங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது- பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Mavitthran
9 பிப்ரவரி 2026
விதிமுறைகளை மீறி கட்டுப்படும் வழிப்பாட்டு தலங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது- பிரதமர் அன்வார் திட்டவட்டம்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.