கிளாந்தான் மாநில எல்லை நுழைவாயில்களில் போக்குவரத்து சீராக உள்ளது

16 பிப்ரவரி 2026, 4:24 AM
கிளாந்தான் மாநில எல்லை நுழைவாயில்களில் போக்குவரத்து சீராக உள்ளது

குவா மூசாங், பிப் 16 – சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர் திரும்புவோரின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், கிளாந்தானுக்கான நுழைவாயில்களில் ஒன்றான குவா மூசாங்-கோலக் கிராய் சாலையில் போக்குவரத்து சீராக உள்ளது.

 கடந்த வியாழக்கிழமை முதல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய போதிலும், போக்குவரத்து நிலவரம் கட்டுக்குள் இருப்பதாகத்  குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரெண்டன்ட் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

 "தாமான் வாங்கி அருகே உள்ள மத்திய தண்டுச்சாலைத் திட்டத்தின் (LTU) தற்காலிகப் பாதை மற்றும் கோலக் கிராய் நோக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து விளக்குகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது," என்றார்.

 "குவா மூசாங்-கோல லிப்பிஸ் மற்றும் குவா மூசாங்-கோலக் கிராய் சாலைகள், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான முக்கிய வழிகளாக உள்ளன," என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தொடர்பு கொண்டபோது கூறினார்.

 மேலும், ஒரே பாதையில் வாகனங்கள் குவிவதைத் தவிர்க்க, திரங்கானுவில் உள்ள கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (LPT) மற்றும் பேராக், கிரிக் வழியாகச் செல்லும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு சாலைப் பயனர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

 "தற்போதைக்கு போக்குவரத்தை திசை திருப்பும் திட்டம் எதுவும் இல்லை. சாலைப் பயனர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், தங்களின் வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.