ad

பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக RM281.9 மில்லியன் ஒதுக்கீடு

8 செப்டெம்பர் 2025, 10:21 AM
பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக RM281.9 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், செப் 8 - நாடு முழுவதும் பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக 2024 முதல் இந்த ஆண்டு ஜூலை 31 வரை RM281.9 மில்லியன் ஒதுக்கீட்டை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் (KPKT) அங்கீகரித்துள்ளது.

பொது கழிப்பறைகள், பல்நோக்கு மண்டபங்கள், பொழுதுபோக்கு வசதிகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை உட்பட 1,730 திட்டங்கள் ஒதுக்கீட்டில் அடங்கும் என்று அதன் அமைச்சர் ஙகா கோர் மிங் கூறினார்.

"உள்ளூர் அரசாங்கத் துறை மூலம், நாடு முழுவதும் உள்ள 156 பிபிடிகளுக்கு BP.1 மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான திட்டங்களுக்கு KPKT நிதியுதவி வழங்கியுள்ளது.

"இந்த ஒதுக்கீடு அவற்றின் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் உள்கட்டமைப்பு, பொது வசதிகள், சமூகப் பொருளாதாரம், பாதுகாப்பு என நான்கு நோக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது," என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

தேசிய பொது இடங்களை மறுசீரமைப்பு செய்யும் முயற்சிகளில் சீர்திருத்தத்திற்கான இலக்குகள், குறிப்பாக பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைப் பராமரிப்பதில் செனட்டர் டத்தோ முஸ்தபா மூசாவின் கேள்விக்கு ஙா பதிலளித்தார்.

திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மைச் சட்டம் 2007ஐ ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் கழிவு சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை நிர்வகிக்க மத்திய அரசு மூன்று சலுகை நிறுவனங்களை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது பொது பூங்காக்களையும் உள்ளடக்கிய ஓர் ஆணையாகும்.

மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, பொது பூங்காக்களை சுத்தம் செய்வது குறிப்பிட்ட பிபிடிகளின் அதிகார வரம்பிற்குள் உள்ளது.

இதற்கிடையில், தூய்மை மற்றும் பொது வசதிகளுக்கு ஏற்படும் சேதங்களைக் கண்காணிப்பதில் உதவ செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை KPKT வரவேற்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.