ad

பகடிவதை குறித்து புகாரளிப்பதை எளிதாக்க சிறப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்

27 ஆகஸ்ட் 2025, 8:39 AM
பகடிவதை குறித்து புகாரளிப்பதை எளிதாக்க சிறப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 27 — பகடிவதை கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிலாங்கூர் அரசாங்கம், மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பகடிவதை குறித்து புகாரளிப்பதை எளிதாக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கும்.

இந்த வழிகாட்டுதல்கள் குழந்தைகள், குறிப்பாக உறைவிடப் பள்ளி மாணவர்கள், பகடிவதை நடந்தால் புகார் அளிக்க ஒரு வழியை வழங்கும் என

பெண்கள் அதிகாரம் மற்றும் நலனுக்கான மாநில நிர்வாக கவுன்சிலர் அன்பால் சாரி கூறினார்.

“ஒருவேளை அவர்களுக்கு தயக்கமாக இருக்கலாம் அல்லது யாரிடமும் சொல்ல மிகவும் பயமாக இருக்கலாம். இந்த வழிகாட்டுதல்கள் மாணவர்கள் புகாரளிப்பதை எளிதாக்கும்.

“விஷயம் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்பு, பகடிவதை கலாச்சாரம் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று மீடியா சிலாங்கூரில் கூறினார்.

தங்கள் குழந்தைகள் பகடிவதைக்கு ஆளானால், பெற்றோர்கள் உடனடியாக கல்வி அமைச்சகம்மற்றும் சமூக நலத்துறை (JKM) ஆகியவற்றில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அன்பால் அறிவுறுத்தினார்.

ஒரு வழக்கு பதிவானவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

“வேறு எந்த தேவையற்ற சம்பவங்களையும் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்று நான் நம்புகிறேன்,” என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.