ad

இன்று முதல் சாரா உதவி திட்டத்திற்கான தகுதியை பொதுமக்கள் சரிபார்க்கலாம்

21 ஆகஸ்ட் 2025, 9:06 AM
இன்று முதல் சாரா உதவி திட்டத்திற்கான தகுதியை பொதுமக்கள் சரிபார்க்கலாம்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 21: மொத்தம் 22 மில்லியன் மலேசிய மை கார்டு வைத்திருப்பவர்கள், இன்று முதல் அதிகாரப்பூர்வ SARA போர்ட்டலான https://sara.gov.my இல் அடிப்படை ரஹ்மா (SARA) உதவிக்கான தகுதியைச் சரிபார்க்கலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய மை கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் ஏற்கனவே SARA உதவியை பெறுநர்கள் உட்பட அனைவரும் இந்த உதவியைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்த உதவியை பெற எந்தப் பதிவும் அல்லது விண்ணப்பமும் தேவையில்லை.

“இந்த உதவி தொகை நேரடியாக பெறுநரின் MyKad-க்கு அனுப்பப்படும் என்பதால், பொதுமக்கள் எந்த மோசடியாலும் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த உதவி திட்டம் மடாணி அரசாங்கத்தின் முயற்சி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னர் தெரிவித்தார்.

RM100 மதிப்புள்ள சாரா உதவி ஆகஸ்ட் 31, 2025 முதல் தேசிய தினத்தை முன்னிட்டு பெறுநரின் MyKad-க்கு அனுப்பப்படும். இதை டிசம்பர் 31, 2025 வரை பயன்படுத்தலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.