ad

பணியாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பின்னரே புதிய பார்க்கிங் முறை அமல்படுத்தப்படும்

8 ஆகஸ்ட் 2025, 4:57 AM
பணியாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பின்னரே புதிய பார்க்கிங் முறை அமல்படுத்தப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 8 — புதிய சிலாங்கூர் நுண்ணறிவு பார்க்கிங் (SIP) முறை, பொது பார்க்கிங் பணியாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பின்னரே செலாயாங்கில் செயல்படுத்தப்படும் என்று செலாயாங் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

நிறுவப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியமானது என்று MPS நிறுவனத் துறை இயக்குநர் ஜூலைனா அபு தாலிப் கூறினார்.

“கட்டண முறைகள் மற்றும் அமலாக்க நடைமுறைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு விஷயங்களைப் பற்றி விவாதிக்க ஆகஸ்ட் 6 அன்று MPS மற்றும் இந்த சேவையை வழங்குவர்களிடையே ஓர் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது,” என்று அவர் கூறினார்.

மேலும், பயனர்களின் வசதி மற்றும் கட்டணதாரர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் சேவை வழங்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்க செலாயாங் நகராண்மை கழகம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்று ஜூலைனா கூறினார்.

இந்த புதிய பார்க்கிங் திட்டம், செலாயாங் நகராண்மை கழகம், சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிகள் ஆகிய நான்கு பிபிடிகளில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

பிபிடிகளில் பார்க்கிங் நிர்வாகத்தை நெறிப்படுத்துவதற்கான மாநில அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.