ad
NATIONAL

நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்

31 ஜூலை 2025, 10:22 AM
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்

கிள்ளான், ஜூலை 31: ஆகஸ்ட் 1 முதல் ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்.

அவை ஷா ஆலம் மாநகராட்சி, சுபாங் ஜெயா மாநகராட்சி மற்றும் செலாயாங் நகராண்மை கழகம் ஆகியவை ஆகும் என டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இத்திட்டம் மூன்று பிபிடிகளில் முதலில் செயல்படுத்தப்படும். மேலும், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி இத்திட்டத்தை அமல்படுத்துவதை ஒத்திவைத்துள்ளது,” என்று சிலாங்கூர் 2024 விவசாய மக்கள் தொகை கணக்கெடுப்பு இடைக்கால அறிக்கையை வெளியிடும் போது அவர் கூறினார்.

முன்னதாக, செயல்திறன் மற்றும் மாநில வருவாயை அதிகரிக்க பல பிபிடிகளில் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் முறை செயல்படுத்துவது தொடர்பாக மாநில அரசு தொடர்ந்து விவாதித்து வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

இதில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மட்டுமே இந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். ஆகஸ்ட் 1 முதல் ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூலம் பார்க்கிங் கட்டண வசூலை செயல்படுத்த Rantaian Mesra Sdn Bhd என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது.

புதிய முறை நீண்ட காலத்திற்கு பார்க்கிங் வருவாய் வசூலை அதிகரிக்கும் என்று மாநில அரசு நம்பிக்கையுடன் உள்ளது. இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் தற்காலிக குறைவு ஏற்படலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.