கோலாலம்பூர், அக். 30- பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களில் நாளை முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
தீபாவளி தினமான நாளை புத்ரா ஜெயா, மலாக்கா, ஆகிய மாநிலங்களில் மாலை வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது. அதே சமயம், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் மாலை வேளையில் மழை பெய்யும் என அத்துறை தெரிவித்தது.
இதனிடையே, பகாங், திரங்கானு, கிளந்தான், சபா, சரவா ஆகிய மாநிலங்களில் நாளை காலை வானிலை தெளிவாக இருக்கும். எனினும், மாலையில் அம்மாநிலங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.கோலாலம்பூர் மற்றும் லபுவானில் வானிலை தெளிவாக இருக்கும்








