MEDIA STATEMENT

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2024 நவம்பரில் நடை பெறும்

9 அக்டோபர் 2024, 12:10 PM
சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2024  நவம்பரில் நடை பெறும்

ஷா ஆலம், அக் 9: சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி மீண்டும்

(SIBF) 2024 நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை சித்தியாசிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

ஏழு நாட்கள் நடைபெறும்  இந்நிகழ்வுக்கு  300,000க்கும் அதிகமான பேர் வருகை

புரிவதை  இலக்காக கொண்டுள்ளதாக சிலாங்கூர் பொது நூலக

இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முஹமட் கூறினார்.

இந்த முறை இந்நிகழ்வு இந்தோனேசியா, சவுதி அரேபியா

மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற பல்வேறு

வெளிநாடுகளைச் சேர்ந்த கண்காட்சி யாளர்கள்,

வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், புத்தகத் துறையினரையும்

உள்ளடக்கியது.

ஆகஸ்ட் 16 அன்று கையெழுத்தான PPAS மற்றும் வட சீனா

இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விளைவாக இந்த

ஆண்டின் SIBF இல் விருந்தினர் நாடாக பங்கேற்க சீனாவும்

அழைக்கப்பட்டுள்ளது என, அவரை தொடர்பு கொண்டபோது

கூறினார்.

இதில் தேசிய எழுத்தாளர்களின் நேர்காணல், வண்ணம்

தீட்டுதல், வரைதல், அதிர்ஷ்ட குலுக்கு உள்ளிட்ட பல்வேறு

சுவாரசியமான நிகழ்ச்சிகள் இடம் பெறும் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.