NATIONAL

கோலாலம்பூரில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது

9 அக்டோபர் 2024, 4:10 AM
கோலாலம்பூரில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை முழுமையாக  சீரமைக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், அக் 9 - நேற்று கோலாலம்பூரில் உள்ள பசார் சேனியில் குழாய்

வெடித்ததால் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது. அதனால்,

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி நிலவரப்படி நீர்

விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் அதன் சமூக ஊடகங்களில்

இதை தெரிவித்தது.  திட்டமிடப்படாத நீர் விநியோகம் தடை ஏற்பட்ட இந்த காலக் கட்டம் முழுவதும் பொறுமை காத்து ஒத்துழைப்பை வழங்கிய பொதுமக்களுக்கு தனது நன்றியை

பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் தெரிவித்துக் கொண்டது.

நுகர்வோருக்கு ஏற்படும் இடையூறுகளின் பாதிப்பைக் குறைக்க, ஆயர்

சிலாங்கூர் நேற்று மாலை முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்று நீர்

விநியோகத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நீர் விநியோகத் தடையால் பிரிக்ஃபீல்ட்ஸ், கேஎல் செண்ட்ரல்,

கோலாலம்பூர் சிட்டி சென்டர், புக்கிட் பங்சார், பார்லிமென்ட், புக்கிட்

துங்கு, டாமன்சாரா ஹைட்ஸ், கம்போங் அத்தாப், மற்றும் தாமான் டுத்தா

ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.