MEDIA STATEMENT

உலக முதலீட்டாளர்களை கவர  நாடு நிலையான, வணிகத்திற்கு ஏற்ப இருப்பதை அரசாங்கம் உறுதி செய்கிறது  என்றார் பிரதமர்

7 செப்டெம்பர் 2024, 7:49 AM
உலக முதலீட்டாளர்களை கவர  நாடு நிலையான, வணிகத்திற்கு ஏற்ப இருப்பதை அரசாங்கம் உறுதி செய்கிறது  என்றார் பிரதமர்

கோலாலம்பூர், செப்டம்பர் 7: நாடு நிலையாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்துகிறது, மேலும் ஒரு சாதகமான மற்றும் வணிக நட்பு சூழலை உருவாக்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஆட்சியை மேம்படுத்தவும், ஊழலுக்கு எதிராக போராடவும், அதிக மதிப்புள்ள முதலீடுகளில் கவனம் செலுத்தவும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், பெரும்பாலான  மக்களுக்கு அதிக வருமானம் தரும் வேலைகளை உருவாக்குவதில் வெற்றி கண்டு வருகிறது என்றார்.

நாடு தொடர்ந்து சிறந்த நிலையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தேசியப் பொருளாதாரம் 5.9 சதவீத விகிதத்துடன் வலுவான வளர்ச்சியைக் காட்டியது.

"கூடுதலாக, அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் சமீபத்திய மீட்சி, இந்த ஆண்டு FBM KLCI இன் விரைவான உயர்வு போன்றவை, நாட்டின்  மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் நாம்  மீட்டு வருவதை காட்டுகிறது. "மடாணி அரசு செயல்படுத்திய கொள்கைகள் நேர்மறையான முடிவுகளைத் தந்துள்ளன என்பதற்கு இது தெளிவான சான்று,என்று அவர் கூறினார்.

நாடு இப்போது உலக முதலீட்டிற்கு விருப்பமான இடங்களில் ஒன்றாக உள்ளது.. இன்று யாங் டி பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமின் உத்தியோகபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து மத்திய பட்டங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும்  விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

எனவே, மக்களின் வருமானம் அதிகரித்து, வாழ்க்கைச் செலவைக் குறைத்து, சமூகப் பாதுகாப்பு வளையத்தை விரிவு படுத்துவதன் மூலம் மிகவும் சமத்துவமான சமூக-பொருளாதாரக் கட்டமைப்பின் மூலம் அடையப்பட வேண்டிய இலக்கை  அடைய வேண்டும். அதே நேரம் அதன் விவரங்களும் பயனும் மக்களிடம் சென்று சேரவேண்டும். இல்லையேல் வளர்ச்சி புள்ளிவிவரங்கள் அர்த்தமற்றவை என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்று அன்வார் கூறினார்.

"மாமன்னரின் மாட்சிமையால் அரசாங்கம் தரமான கல்வி, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மலிவு விலையில் வீடுகளுக்கான அணுகலை அதிகரிக்க தொடர்ந்து கடினமாக உழைக்கும், இதனால் மக்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்," என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தையும் பொது மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அன்வார், யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உத்தியோகபூர்வ   பிறந்த நாளுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் அவரது மாட்சிமை மற்றும் அரச ராணி அகோங் ராஜா ஸ்ரீ சோபியா மற்றும் முழு குடும்பமும் இறைவன் அருளால் ஆசீர்வதிக்கப் பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

அவர் சுல்தான் இப்ராஹிமின் மரியாதை மற்றும் நாட்டைப் பாதுகாப்பதில் விவேகம் ஆகியவற்றிற்காக அன்பு மற்றும் பாராட்டு உரையை நிகழ்த்தினார். "உண்மையில், அரசியலமைப்பில்  அரசரே, நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் அவரது மாட்சிமையின் பங்கு மிகவும் முக்கியமானது. மாமன்னர் மாட்சிமை ஒற்றுமையின் குடை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டின் புரவலர்.

“அரசாங்கத்திற்கு அறிவுரை கூறும் மாண்புமிகு அரசவையின் உத்தரவுகள், சாமானியர்களின் நலனில் உள்ள அவரது ஞானத்தையும் அக்கறையையும் அடிக்கடி பிரதிபலிக்கின்றன,” என்றும்  அவர் கூறினார்.

.

மாட்சிமை மிக்க மாமன்னர்  சுல்தான் இப்ராஹிம்   இன்று இஸ்தானா நெகாராவில் 2024 ஃபெடரல் பட்டம், நட்சத்திரம் மற்றும் பதக்கம் வழங்கும் விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

ஜூலை 20 அன்று யாங் டி-பெர்துவான் அகோங் காக பட்டம்  சூட்டப்பட்ட பின்னர், அவரது மாட்சிமை நிறைவு செய்யும் முதல் மரியாதை விழா இதுவாகும். விழாவிற்கு மன்னர் ராணி அகோங் ராஜா ஸ்ரீ சோபியாவும் வந்திருந்தார்.

தேசிய தொலைக்காட்சி நிலையங்களினால் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட விழாவில், அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து மொத்தம் 116 நபர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்டம், நட்சத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றனர்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.