கோலாலம்பூர், ஆகஸ்ட் 30: நள்ளிரவு 12 மணி வரை கவுண்ட்டவுனுக்காகக் காத்திருக்கும் கூட்டத்தின் மையமாக, நாடு முழுவதும் தேசிய தினம் 2024 கொண்டாட்டம் கலகலப்பாக இருந்தது.
முன்னதாக, நள்ளிரவுக்கு சில மணி நேரங்களுக்கு முன், வருகையாளர்களுக்கு தேசபக்தி மற்றும் தேசத்தின் மீதான அன்பின் உணர்வை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்ட மேடை நிகழ்ச்சிகள் மற்றும் சமய உரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.
சரியாக நள்ளிரவு 12 மணிக்கு, அங்கிருந்த கூட்டத்தின் உற்சாகமான "மெர்டேக்கா" கோஷங்களுடன் பல இடங்களில் வான வேடிக்கைகளின் தீப்பொறிகள் ஒளிரத் தொடங்கின.
மலேசியாவின் நேஷனல் நியூஸ் ஆர்கனைசேஷன் (பெர்னாமா) இங்குள்ள விஸ்மா பெர்னாமா லாபி மைதானத்தில் த்ரெஷோல்ட் 31 @பெர்னாமாவை ஏற்பாடு செய்வதன் மூலம் தேசிய தினத்தை கொண்டாட தவறவில்லை.
அதில் திரு. அருள் ராஜூ துரார் ராஜ் மற்றும் பெர்னாமா ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அலெனா முராங்கின் இசை நிகழ்ச்சி, ராணுவ கலை முகவரகத்தின் தேசபக்தி பாடல்கள் பாடுதல் மற்றும் கோத்தா டானாவ் பள்ளி மாணவர்களில் தேசிய பாடல் நடன நிகழ்ச்சிகளும் சிறப்பித்தன.
இதற்கிடையில் அம்மி சர்ஜ், நிஜ்மெனு,யூனா, ஹேய்ல் ஹூசானி, போன்ற உள்ளூர் கலைஞர்கள் பெட்ரோனாஸ் டுவீன் டவர்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியான அம்பாங் மெர்டேக்கா 2024 ஐக் கொண்டாடுவதற்காக சுமார் 20,000 நகரவாசிகள் எஸ்பிளனேட் கே எல் சி சி பூங்காவில் கூடி கொண்டாடினர்.
சிலாங்கூர் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில நிர்வாகம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து 67வது தேசிய தினத்தை மாநில அளவில் ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடினார்கள்.
சிலாங்கூரில், ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தில் மெர்டேக்கா நிகழ்வு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது, 60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இன்று பிற்பகல் முதல் அங்கு வந்து ஒன்றுக்கூடி தேசிய தினத்தை கொண்டாடினர்.
மாலை 4.50 மணிக்கு ஆரம்பமான நிகழ்வுக்கு முன்னதாக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) ஒருங்கிணைத்த செலாவத் மற்றும் காசிதா விழாவை ஏற்பாடு செய்திருந்தது.








