ஷா ஆலம், ஆக. 17- மலேசிய விளையாட்டுப் போட்டியின் (சுக்மா)
நான்காவது நாளான இன்று மேலும் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல
சிலாங்கூர் அணி இலக்கு நிர்ணயித்துள்ளது.
சைக்கிளோட்டப் போட்டியில் யோங் மெங் கியாட் வாயிலாகவும் குறி
சுடும் போட்டியில் ஆண்கள் பிரிவின் மூலமாகவும் கராத்தே போட்டியில்
ஜி.ஸ்ரீகா (மகளிர் பிரிவு) மற்றும் பி.ஜீவேஷ் (ஆண்கள் பிரிவு) வாயிலாகவும்
தங்கப் பதக்கங்களுக்கு சிலாங்கூர் குறி வைத்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி மூன்று தங்கம் மற்றும் ஐந்து வெள்ளிப்
பதக்கங்களுடன் சிலாங்கூர் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தில்
உள்ளது.








