NATIONAL

லீ கீ ஹியோங்கின் சேவையைத் தொடரக்கூடிய சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்

10 மே 2024, 3:35 AM
லீ கீ ஹியோங்கின் சேவையைத் தொடரக்கூடிய சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்

உலு சிலாங்கூர், மே 10: கோல குபு பாரு மக்கள் நாளை இடைத்தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரின் மனைவி, டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அழைப்பு விடுத்தார்.

வாக்களிப்பில் புறக்கணிப்பு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று வான் அசிசா கூறினார், குறிப்பாக சமூகத்திற்குச் சிறப்பாக சேவை செய்ய முடியும் என்று நம்பப்படும் வேட்பாளர்களுக்கு ஆகும் என்றார்.

"இந்த ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் பெண்களுக்கு மட்டுமல்ல, கோல குபு பாருவில் உள்ள அனைத்து வாக்காளர்களின் நலனிலும் அக்கறை செலுத்துவார். வாக்களிக்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். இது நம் பொறுப்பு.

அவர் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுடன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

இதற்கிடையில், மறைந்த லீ கீ ஹியோங் அவரிகளின் சேவை தொடரக் கூடிய சிறந்த வேட்பாளர் பாங் சோக் தாவோ என்று வான் அசிசா விவரித்தார்.

"நான் எங்கள் வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வந்தேன். எங்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்," என்று அவர் கூறினார்.

"பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே வாக்காளர்களின் வரவேற்பு மிகவும் சிறப்பாக உள்ளது. நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இளம் பெண்ணின் குரல் தொகுதியில் ஒலிக்க வாய்ப்பளிக்குமாறு அனைவரையும் அழைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.