கோலாலம்பூர், நவ 20 - இன்று கோலாலம்பூர் சிட்டி ஹால் (டிபிகேஎல்) ஏற்பாடு செய்திருந்த மீடியா வாக் ஹன்ட் 2023 இல் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உள்ளூர் ஊடகவிலாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு கோலாலம்பூர் மாநகர் மன்றம் பற்றிய செய்திகளைப் பரப்புவதில் ஊடகவிலாளர்கள் பங்களிப்பை கௌரவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப் பட்டது என டிபிகேஎல் தனது அறிக்கையில் தெரிவித்தது.
டிபிகேஎல் செயல்படுத்திய திட்டங்களை ஊக்குவித்து அதனை வெளியிட்ட ஊடகவிலாளர்கள் கோலாலம்பூர் மேயர் டத்தோ கமருல்ஜமான் மாட் சாலே தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
"ஊடகத்திற்கும் டிபிகேஎலுக்கும் இடையிலான இந்த நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பது எனது மிகப்பெரிய நம்பிக்கையாகும், இதனால் நகர மக்கள் டிபிகேஎல்யின் திட்டங்கள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளைப் பெற முடியும்," என்று அவர் கூறினார்.
மொஹமட் ஃபஸ்லி ரஷிதி மற்றும் அசார் மர்சுகி ஆகியோரால் மலேசிய தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) குழு முதல் பரிசையும் மற்றும் RM1,500 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களையும் பெற்றது.
- பெர்னாமா








