ECONOMY

பிரதமரை தாக்குவதை நிறுத்தி, மத்திய அரசுடன் நல்லுறவை ஏற்படுத்துங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்து.

1 மே 2023, 10:59 AM
பிரதமரை தாக்குவதை நிறுத்தி, மத்திய அரசுடன் நல்லுறவை ஏற்படுத்துங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்து.

கோலாலம்பூர், மே 1 - எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மத்திய அரசை தாக்குவதை நிறுத்திவிட்டு, மத்திய அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி, கூட்டாட்சி நிர்வாகம் முறையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமெனில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சமூகத் தொடர்பு துறையின் (ஜே-கோம்) இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமது அகஸ் யூசாஃப் தெரிவித்தார்.

“அன்வார் பலமுறை அவ்வாறு செய்ய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். “அன்வார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அதைத்தான் செய்தார். அவர் அப்போதைய பிரதமருடன் (டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) பேச்சுவார்த்தை நடத்த முன்  வந்தார், இதன் விளைவாக செப்டம்பர் 13, 2021 அன்று மத்திய அரசுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் (PH) இடையே அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் மாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (புரிதல் ஒப்பந்தம்) கையெழுத்தானது என அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

அப்போது அன்வாரின் நடவடிக்கைகள், நிர்வாக மாற்றம், நாடாளுமன்ற சீர்திருத்தங்கள், நீதித்துறை சுதந்திரம் மற்றும் மலேசியா ஒப்பந்தம் 1963 (MA63) நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான நல்ல நிகழ்ச்சி நிரலுடன், ஆக்கபூர்வமான எதிர்ப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்ததாக முகமது அகஸ் மேலும் கூறினார்.

வாக்குறுதி அளித்தபடி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை விரைந்து செயல்படுத்த நிதியமைச்சராக உள்ள அன்வார் கடுமையாக உழைத்து வருகிறார் என்றார்.

"பொறுமையாய் இருங்கள், அன்வாரும்  ஒற்றுமை அரசும் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் மட்டுமே ஆகிறது. அன்வார் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றியை நீங்கள் மனபூர்வமாக அளவிட வேண்டும் , ”என்று அவர் கூறினார்.

அன்வார் நல்லாட்சி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்க்கவும்,  ஏழைகளின் நலனைப் பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக முகமது அகஸ் கூறினார்.

“நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். சீர்திருத்த முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு, மலேசிய மடாணியின் கொள்கை நன்கு செயல்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.