ad
ACTIVITIES AND ADS

சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் தின வாழ்த்துக்கள்

15 ஜனவரி 2023, 6:02 AM
சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் தின வாழ்த்துக்கள்

ஷா ஆலம், ஜன 15- பொங்கல் திருநாளை இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடும் மாநிலத்திலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இல்லற வாழ்வில் எல்லா வளங்களையும்  கொண்டு வரும் இனிய திருநாளாக பொங்கல் திருநாள் விளங்குவதாக அவர் தனது பேஸ்புக் பதிவின் வாயிலாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் சிலாங்கூரிலுள்ள அனைத்து தமிழர்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கு எல்லா வளங்களும் கிடைக்க இந்த திருநாள் வகை செய்யட்டும் என அவர் மேலும் கூறினார்.

உழவர்களின் உழைப்பை போற்றும் தினமான இந்த பொங்கல் திருநாள் புதுப்பானையில் பொங்கலிட்டு அனைத்து மக்களுடனும் கூடி உண்ணும்  உன்னத பெருநாளாகவும் விளங்குகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.