ad
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் 48 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்

29 நவம்பர் 2022, 6:54 AM
சிலாங்கூரில் 48 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்

ஷா ஆலம், நவ 29: இன்று காலை 8 மணி நிலவரப்படி, இரண்டு மாநிலங்களில் உள்ள நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 81 குடும்பங்களைச் சேர்ந்த 270 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக தங்குமிடத்தில் (பிபிஎஸ்) தஞ்சமடைந்துள்ளனர்.

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 67 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இன்னும் மூன்று பிபிஎஸ்களில் இருப்பதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) பேஸ்புக் மூலம் தெரிவித்தது.

சிலாங்கூரில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் இன்னும் ஒரு பிபிஎஸ் இல் தங்கியிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

பகாங்கில் நேற்று மதியம் 12 மணிக்கு இரண்டு பிபிஎஸ் மூடப்பட்ட நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.