சுபாங்.நவ.17- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடு முழுவதிலும் நடத்தும் சூறாவளி பிரச்சாரத்தில் நேற்று டத்தோ ரமணனுக்கு ஆதரவாக பேசிய கூட்டத்தில் -நான் பிரதமரானால் நட்டை உலக வங்கியிடம் அடகு வைத்து விடுவேன் என்று அடி அவாங் விஷம பிரச்சாரம் செய்கிறார்.
முன்பு உலக வங்கியின் மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருந்தேன். அந்தக் காலக் கட்டத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சில ஏழ்மையான நாடுகளை கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றினேன். அவருக்கு இப்படி பட்ட உலக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற பொறாமை இல் இவ்வாறு உளறுகிறார் என்று பாஸ் கட்சியின் தலைவரை சாடினார்.
செய்தி சுப்பையா சுப்ரமணியம்








