ad
ECONOMY

சிலாங்கூரில் கலைத்துறையின் கண்ணியமான வளர்ச்சிக்கு எம்பிஐ கை கொடுக்கும்

28 ஆகஸ்ட் 2022, 2:36 PM
சிலாங்கூரில் கலைத்துறையின் கண்ணியமான வளர்ச்சிக்கு எம்பிஐ கை கொடுக்கும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 28: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ கலை தொழில் துறையை கௌரவப்படுத்தும் முயற்சிகளுக்கு தொடர்ந்து கை கொடுக்கும்.

தலைமை நிர்வாக அதிகாரி நோரிடா முகமது சிடெக் கூறுகையில், சிலாங்கூரில் கலைத்துறையில் எந்த வளர்ச்சியும், குறிப்பாக ஷா ஆலமை மையமாக கொண்ட, கலை துறை வளர்ச்சியை  எப்போதும் வரவேற்கும்.

சிலாங்கூர் மக்களின் பொது சொத்துக்களை வைத்திருப்பவர் மற்றும் காப்பாளர் என்ற முறையில் அவை சிறப்பாக நிர்வகிக்க படுவதை உறுதிசெய்வது எம்பிஐ பொறுப்பு.

"அந்த நோக்கத்திற்காக இது அரசாங்கம், டிஜிட்டல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு மட்டுமல்ல, கலைக்கும் பொருந்தும் " என்று அவர் நேற்று கூறினார்.

சிலாங்கூர் தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (ஜிபிஎம்எஸ்) இணைந்து ஷா ஆலத்தில் கலை நகர கலாச்சாரத்தை உருவாக்குவதும் சுதந்திர மாதத்தின் உணர்வைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்ட தொடக்க நிகழ்ச்சி இலவசமாக நடைபெற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.