ad
ECONOMY

கலை அருங்காட்சியகம், தொற்று நோய்க்கு பிந்தைய சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கிறது

27 ஜூலை 2022, 9:32 AM
கலை அருங்காட்சியகம், தொற்று நோய்க்கு பிந்தைய சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கிறது

ஷா ஆலம், ஜூலை 27: சுற்றுலாத் திறனை வலுப்படுத்தவும், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின் அத் துறைக்கு புத்துயிர் அளிக்கவும் சிலாங்கூர் கலை அருங்காட்சியகம் உருவாக்கவுள்ளது.

டத்தோ மந்திரி புசார் கருத்துப்படி, அடையாளம் காணப்பட்ட இயக்கத் திட்டங்களில் ஷா ஆலம் தற்கால மற்றும் நவீன கலை (SAMA) சுற்றுலாக் குழுவின் கீழ் மேம்பாடு உள்ளது.

தேசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய கலைஞர்களின் மகத்துவத்தைக் காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஈர்ப்பு திறன் கொண்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

"சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல இடங்கள் உள்ளன, இதனால் சுற்றுலாவின் திறனை வலுப்படுத்துவது  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்" என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

இன்று முதல் சிலாங்கூர் திட்டத்தை (RS-1) முன்வைத்து பேசிய அவர், தொழில்துறையை மீண்டும் ஊக்குவிக்க சிலாங்கூர் மாநில சுற்றுலா மாஸ்டர் பிளான் 2021-2026 ஐ அறிமுகப்படுத்தியது என்கிறார்.

2020 முதல் இரண்டு ஆண்டுகளில் வருமான ஆதாரங்கள் மற்றும் இத்துறை தொடர்பான வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோயின் விளைவுகளைச் சமாளிப்பதற்கு இத்திட்டம் உதவும்  என்று அவர் விளக்கினார்.

"மலேசியா அதன் வளமான கலாச்சாரத்துடன் இந்த பிராந்தியத்தின் சுற்றுலாத் துறையில் அதன் சொந்த ஈர்ப்பைக் கொண்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பில் ஒன்றாகும்.

"தொற்றுநோயின் போது, 2020 இல் 72 விழுக்காடு திடீரென வீழ்ச்சியைப் பதிவு செய்வதன் மூலம் இந்தத் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது" என்று அமிருடின் மீண்டும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.