ad
ECONOMY

RM1,000 பெற தகுதியுடைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் உதவி கோரவில்லை

21 ஜூன் 2022, 4:12 AM
RM1,000 பெற தகுதியுடைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் உதவி கோரவில்லை

ஷா ஆலம், ஜூன் 21: சிலாங்கூர் பாங்கிட் (பிஎஸ்பி) உதவியைப் பெறாத கோத்தா கெமுனிங் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கிள்ளான் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகத்திற்கு (பிடிடி) சென்று உதவி கோருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாநில சட்டமன்ற உறுப்பினர் வீ கணபதிராவ், இதுவரை நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பலன்களைப் பெறத் தகுதி பெற்றிருந்தாலும், RM1,000 உதவியை இன்னும் கோரவில்லை என்று கூறினார்.

மே 7 அன்று, கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 121,987 குடும்பங்கள்  பிஎஸ்பி தொகையாக RM1,000 பெற்றதாக டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்பட பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க, RM12.2 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.