ad
ECONOMY

நாளை ஷா ஆலமில் நடைபெறும் மலிவான விற்பனை திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

17 ஜூன் 2022, 8:32 AM
நாளை ஷா ஆலமில் நடைபெறும் மலிவான விற்பனை திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜூன் 17: நாளை இங்கு அருகில் உள்ள கம்போங் புக்கிட் நாகாவில்  அல்-பக்ரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் நடக்கும்  மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

இங்கு விற்கப்படும் பொருட்கள் தரமானவை புதியவைகள் அப் பொருட்களை மலிவான விலையில் வழங்குவதை அருகில் உள்ள சந்தை யுடன் ஒப்பிடும்போது தெரியும்.

சந்தையில்  காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை கோழி, மீன், மாட்டு இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) தெரிவித்துள்ளது.

விற்பனையானது 800 கிராம் கோழிக்கு RM10 அல்லது RM25 (இரண்டு கிலோ), புதிய மாட்டு இறைச்சி/எலும்புகள் (ஒரு கிலோவுக்கு RM33), கிரேடு பி கோழி முட்டைகள் (ஒரு அட்டை RM12) மற்றும் கானாங்கெளுத்தி/செலாயாங் மீன் (கிலோவுக்கு RM8) ஆகியவற்றை வழங்குகிறது.[

மே 19 அன்று, டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டம் மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் செயல்படுத்தப்பட்டது, அதில் இருந்து 60,000 குடும்பங்கள் வெற்றிகரமாக பயனடைந்து உள்ளதாகக் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.