ad
ECONOMY

சுங்கை புசாரில் நடைபெற்ற திறந்த இல்லத்தில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

21 மே 2022, 12:58 PM
சுங்கை புசாரில் நடைபெற்ற திறந்த இல்லத்தில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

சபாக் பெர்ணாம், மே 21: இன்று பிற்பகல் சுங்கை புசார் மைதானத்தில் நடைபெற்ற சிலாங்கூர் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்லத்தில் 5,000க்கும் மேற்பட்ட பல இன விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், மாநிலச் செயலர் டத்தோ 'ஹரிஸ் காசிம், மாநிலங்களவை சபாநாயகரும் சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினரும் ஆன இங் சுயி லிம், தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா, சபாக் சட்டமன்ற உறுப்பினர் அகமது முஸ்டைன் ஓத்மான் மற்றும் சுங்கை பஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ' இம்ரான் தாம்ரின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.