ECONOMY

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலையேறுவோருக்கு பிப்.5 முதல் அனுமதி

1 பிப்ரவரி 2022, 2:22 AM
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலையேறுவோருக்கு பிப்.5 முதல் அனுமதி

ஷா ஆலம், பிப் 1- சிலாங்கூரிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

பருவமழை காரணமாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் கூனோங் நுவாங் பகுதியில் மட்டும் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில வன இலாகா தனது முகநூல் பதிவில் கூறியது.

மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முறையான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.

சிலாங்கூர் தெங்கா பகுதியைப் பொறுத்தவரை கூனோங் ஹீத்தாம், புக்கிட்

செனுவாங், சுங்கை செப்போ நீர் வீழ்ச்சி, புக்கிட் சாகா, புக்கி ஆப்பே, புக்கிட் புரோகா, புக்கிட் கெம்பாரா,உலு பெர்டிக் நீர்வீழ்ச்சி, சுங்கை பீசாங் நீர்வீழ்ச்சி, சோப்பியா ஜீன் நீர் வீழ்ச்சி, லூபோக் தூடோங் நீர் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

உலு சிலாங்கூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கூனோங் உலு செமாங்கோ, புக்கிட் சொரோக்கோ, புக்கிட் கூட்டு, லதா மேடாங் நீர் வீழ்ச்சி, லதா மக்காவ் நீர் வீழ்ச்சி, செதிங்கி நீர்வீழ்ச்சி, லுபோக் காவா நீர் வீழ்ச்சி ஆகியவை மலையேறும் நடவடிக்கைகளுக்கு அறுமதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இப்பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் தேதி தொடங்கி மலையேறும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.