ECONOMY

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க மீண்டும் சிலாங்கூர் வேலைவாய்ப்பு சந்தை

16 செப்டெம்பர் 2021, 11:22 AM
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க மீண்டும் சிலாங்கூர் வேலைவாய்ப்பு சந்தை

ஷா ஆலம், 16 செப்டம்பர்:  மாநிலத்தில்  வேலையின்மை பிரச்சினையை சமாளிக்க, குறிப்பாக மாநில இளைஞர்களுக்கு உதவ,  சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சியை, மீண்டும் நடத்தும்.

தேசிய மீட்சித் திட்டத்தில் (பிபிஎன்) மாநிலம் இரண்டாம் கட்டத்திற்கு மாறிவுள்ளதால் நடமாட்டு கட்டுப்பாடு ஆணை (எஸ்ஓபி) க்கு ஏற்ப வேலை வாய்ப்பு கண்காட்சி, மீண்டும் நடத்த பட வேண்டும் என முகமது கைரூடின் ஒத்மான் மனித மூலதன மேம்பாடு, இளம் தலைமுறையினர் மேம்பாடு மற்றும்  விளையாட்டு துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"இந்த காலத்திற்குள் அது சாத்தியமில்லை என்றால், சிலாங்கூர் பின்னர் VAT இன் மூன்றாம் கட்ட மீட்சிக்கு பிறகு நாங்கள் செயல் படுத்துவோம்" என்று முகமது கைரூடின் ஒத்மானை தொடர்பு கொண்டபோது கூறினார். மாநிலத்தில் 4.5 சதவிகிதம் அல்லது 100,000 சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு தற்போது வேலை இல்லை, அவர்களில் 70,000 பேர் இளைஞர்கள் என  அவர் கூறினார்.

இந்த ஆண்டு 8,000 க்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்ற ரோடா டாருல் எஹ்சான் முன் முயற்சியை (RiDE) அறிமுகப்படுத்துவது உட்பட பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்று அவர் விளக்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் வேலை கண்காட்சியில்  200 நிறுவனங்கள் பங்கேற்றன,  அதன் மூலம், குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட 11,000 வேலை வாய்ப்புகளை வழங்கியது.

கோவிட் -19 வழக்குகள் கடுமையாக அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த திட்டம் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப் பட்டது. சிலாங்கூர் கெர்ஜயா, ஜோம் கெர்ஜா, சிலாங்கூர் ஆட்டோமோட்டிவ் டிவிஇடி மற்றும் சிலாங்கூர் ஃப்ரீலான்சர்ஸ் திட்டங்கள் மூலம் வேலையின்மையை நிவர்த்தி செய்ய இந்த ஆண்டு மொத்தம் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

கோவிட் -19 நோய்த்தொற்றை தொடர்ந்து சிலாங்கூர் மாநில பட்ஜெட் 2021ன் வழி மாநில மக்களுக்கு உதவ RM76 மில்லியன் ஒதுக்கீடுகள் மூலம் பல முயற்சிகளை  அரசு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.