NATIONAL

சாலைத் தடுப்பில் போலீசார் மீது பட்டாசு வீச்சு- இரு இளைஞர்கள் கைது

20 மே 2021, 8:21 AM
சாலைத் தடுப்பில் போலீசார் மீது பட்டாசு வீச்சு- இரு இளைஞர்கள் கைது

கோலாலம்பூர், மே,20-  சாலைத் தடுப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மீது பட்டாசை கொளுத்தி வீசிய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடி அருகே நிகழ்ந்தது.

பதினாறு மற்றும் இருபது வயதுடைய அவ்விரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளை சாலைத் தடுப்புக்கு சற்று தள்ளி நிறுத்தியதைக் கண்டு போலீசார் சந்தேகம் கொண்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவே கூறினார்.

அவ்விளைஞர்களில் ஒருவன் திடீரென பட்டாசை கொளுத்தி பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மீது வீசிவிட்டு தன் சகாவுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பியோடினான் என்றார் அவர்.

போலீசார் அவர்களை துரத்தி சென்று சற்று தொலைவில் மடக்கிப் பிடித்ததாக கூறிய அவர், அவர்களிடமிருந்து 14 பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டியை பறிமுதல் செய்தனர் என்றார்.

கைதான இருவரும் விசாரணைக்காக வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.