MEDIA STATEMENT

நோன்பு பெருநாளில் பாதுகாப்பு பணியில் 13,000 போலீஸ்காரர்கள்-சிலாங்கூர் போலீஸ் தலைவர் தகவல்

28 ஏப்ரல் 2021, 3:37 AM
நோன்பு பெருநாளில் பாதுகாப்பு பணியில் 13,000 போலீஸ்காரர்கள்-சிலாங்கூர் போலீஸ் தலைவர் தகவல்

ஷா ஆலம், ஏப் 28-நோன்ப் பெருநாள் சீரான முறையில் கொண்டாடப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு சிலாங்கூர் மாநில போலீஸ் துறை 13,000க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களை பணியில் ஈடுபடுத்தும்.

நோன்பு பெருநாளின் போது ஏறக்குறைய அனைத்து போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் தங்களின் பணி அட்டவணைக்கேற்ப  கடமையாற்ற பணிக்கப்படுவர் என்பதோடு மருத்துவ விடுப்பில் உள்ளவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கான விடுமுறை முடக்கப்படுகிறது என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி  முகமது கூறினார்.

இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் மூன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து 1,500 பொட்டலங்கள் அடங்கிய நோன்பு கஞ்சியை  பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நோன்பு பொருளின் போது விருந்தினர்கள் வருகையை கண்காணிக்க வீடு வீடாக சோதனை கொள்ளும் விவகாரத்தில் போலீஸ் விவேகத்தை  பயன்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.