ad
RENCANA PILIHAN

பிகேஎன்எஸ் 10,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படியான வீடுகள் நிர்மாணிக்க இலக்கு !!!

22 ஜூலை 2020, 7:32 AM
பிகேஎன்எஸ் 10,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படியான வீடுகள் நிர்மாணிக்க இலக்கு !!!

ஷா ஆலம், ஜூலை 22:

இந்த ஆண்டு தொடங்கி 2029 வரையில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்எஸ்) 10,000-க்கும் மேற்பட்ட கட்டுப்படியான வீடுகள் நிர்மாணிக்க இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஜைன் கூறினார். மேற்கண்ட திட்டங்களை பெர்னாம் ஜெயா, கோத்தா புத்ரி, சைபர்ஜெயா மற்றும் செத்தியா அலாம் ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் என்றார் அவர்.

" பிகேஎன்எஸ், சிலாங்கூர் மாநில மக்கள் வீடுகளை வாங்க வழி வகுக்கிறது. தற்போது, முதல் கட்டமாக 864 அடுக்குமாடி வீடுகளை கட்ட இருக்கிறது," என்று சிலாங்கூர் இன்றுக்கு அஸிஸி தெரிவித்தார்.

தற்போது பின்வரும் திட்டங்கள் பூர்த்தி அடைந்துள்ளது;-

1. புக்கிட் பொத்தாக், இரட்டை 1,422 வீடுகள்

2. பண்டார் பாரு பாங்கி செக்சன் 3-இல் 124 அடுக்குமாடி வீடுகள்

3. அன்தாரா காப்பி, 129  1 1/2 மாடி வீடுகள்

4. கோத்தா புத்ரி, 198 நகர வீடுகள்

5. அன்தாரா காப்பி, 80 தரை வீடுகள்

6. தாமான் கெருயூங், 60 இரண்டு மாடி வீடுகள்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.