NATIONAL

தீயணைப்புப் படையில் அதிக பெண்களைச் சேர்ப்பீர்! - ஜுரைடா கமாருடின்

24 நவம்பர் 2019, 11:47 PM
தீயணைப்புப் படையில் அதிக பெண்களைச் சேர்ப்பீர்! - ஜுரைடா கமாருடின்

தாவாவ், நவ.25:

ஆபத்து அவசர வேளையில் பெண்களையும் சிறார்களையும் மீட்பதற்கு ஏதுவாக அதிக எண்ணிக்கையிலான பெண் பணியாளர்களையும் சேர்க்கும்படி தீயணைப்பு மற்றும் மீட்பு படை கேட்டுக் கொள்ளப்பட்டது. தீச்சம்பவங்களைத் தவிர்ப்பது மற்றும் அவசர வேளையில் பெண்கள் மட்டுமே உதவக் கூடிய சூழ்நிலைகளில் பெண் பணியாளர்களின் அவசியம் ஏற்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

ஆபத்தான சூழ்நிலையில் சிக்கும் மகளிர் மற்றும் சிறார்களுக்கு கனிவான மற்றும் மென்மையான உதவிகளை வழங்கிட தீயணைப்பு படையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அவர் சொன்னார்.

இங்குள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படையைச் சேர்ந்த 50 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜுரைடா பேசினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.